அத்தம்மாவின் அலம்பல்கள் - 2

2 கருத்துகள்


அத்தம்மாவின் அலம்பல்கள் - 2

சென்ற பதிவில் அத்தம்மாவை பற்றி சில விஷயங்களை பகிர்ந்தேன்.அதன் தொடர்ச்சி இங்கே........

திருமணம் போன்ற நிகழ்ச்சியின் போது பெரியத்தா, சின்னத்தா, மாமி குடும்பங்கள் ஒன்றாக இருக்கும் போது இது போன்ற சுவாரசியமான விஷயங்களை பேசி விடிய விடிய சிரிப்பு தான்.

அதிலும் எங்கள் அத்தம்மா முட்டை வாங்கியது சூப்பர் .இந்த விஷயத்தை எப்பொழுது நினைத்தாலும் சிரிப்பை அடக்கவே முடியாது.

எப்பொழுதும் அத்தம்மா நாட்டு முட்டை வந்தால் வாங்குவார்.வீட்டில் கோழிகள் எல்லாம் வளர்த்த பொழுதும் யாராவது விற்க வந்தால் உடனே வாங்கி விடுவார். மிகவும் இரக்க சுபாவம் வேறு.

ஒருமுறை  ஒரு பெண் கொண்டு வந்த முட்டைகளை வாங்கவென்று முடிவு செய்து மருமகள்களை கூப்பிட்டு பார்த்தார்.

அனைவரும் அப்பொழுது மதிய உணவிற்கு பின் தூங்கி கொண்டிருந்தனர்.அவரே ஒரு பாத்திரத்தில் தண்ணீர் பிடித்து வந்து முட்டைகளை போட்டு நல்ல முட்டை தான் என்று உறுதி செய்துக் கொண்டு அனைத்து முட்டைகளையும் வாங்கி விட்டார்.

மாலை மருமகள்கள் எழுந்து வந்ததும் என் பெரியம்மாவை அழைத்து நாட்டு முட்டை வாங்கி வைத்திருக்கிறேன். உள்ளே எடுத்து வை. இனிமேல் பிள்ளைகளுக்கு இதை ஊற்றி கொடுங்கள் என்று சொன்னார்.

என் பெரியம்மா முட்டைகளை எடுத்து பார்த்து அதிர்ச்சி அடைந்து விட்டார்.அனைத்தும் மிகவும் சிறிய அளவில் இருந்திருக்கிறது.

உடனே அவர் என்ன மாமி இப்படி வாங்கி இருக்கீங்க எல்லாம் குட்டி குட்டியா இருக்கு ஒன்று கூட பெரிய முட்டை இல்லையே உங்களை நன்றாக ஏமாற்றி விட்டார்கள் என்று சொல்லி விட்டார்.

உடனே அத்தம்மா இல்லையே நான் கண்ணாடி போட்டு பார்த்து தானே வாங்கினேன். எல்லாம் பெரிய பெரிய முட்டை தானே என்று சொல்லி சமாளித்தார்.

பவர் கிளாசில் பார்க்க அவருக்கு எல்லாமே பெரியதாக தெரிந்திருக்கிறது. விஷயம் எல்லாருக்கும் தெரிந்து ஒரே சிரிப்பு தான்.முப்பது முட்டைகளும் வீணானது தான் மிச்சம்.

அத்தம்மா அந்த பெண்ணை வெகு நாட்களாக தேடி கொண்டே இருந்தார். அவர் திரும்ப வரவே இல்லை.

நான் முதலில் சமைக்க ஆரம்பித்து செய்த ரசம் தான்.அப்பொழுது பள்ளி மாணவி தான்.

ஒரு தடவை அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாத போது தான் செய்தேன்.
அப்பொழுது நான், அம்மா, அத்தம்மா மற்றும் வீட்டு வேலைக்கு இருக்கும் பெண்ணின் மகள் தான் இருந்தோம்.

நான் தான் ரசம் வைப்பேன் என்று அத்தம்மாவை அடுப்படி அருகே கூட வர விடவில்லை.இந்த ரசம் வைப்பதற்கு எனக்கு அசிஸ்டன்ட் வேறு ..

 நானும் எனக்கு தெரிந்த வரையில் ரசம் செய்து விட்டேன். எனக்கு அளவு தெரியாததால் ஒரு கோப்பை அளவு தான் செய்தேன். அம்மா சாப்பிடவில்லை.நாங்கள் மூவரும் சாப்பிட்டு விட்டோம்.

என் அத்தம்மா என் ரசத்தை வெகுவாக பாராட்டினார்.

இரவு உணவின் போது என்  அம்மாவிடம் ரசம் ரொம்ப நன்றாக இருந்தது.நான் அதனை சாப்பிடுகிறேன் எடுத்து வா என்று கூறினார்.

உடனே அம்மா சிரித்துக் கொண்டே  உங்கள் பேத்தி வைத்ததே ஒரு  கோப்பை தானே என்று சொல்லி விட்டார்.

அதிலிருந்து என் அத்தம்மா எங்கள் வீட்டிற்கு எந்த உறவினர்கள் வந்தாலும் படையப்பா பட ஸ்டைலில் என் சமையல் திறனை புகழ்வார்.என் பேத்தி ரசம் வச்சா அவ்வளவு நல்லா இருக்கும் ஆனா ஒரு கோப்பை தான் செய்யும் என்று.

அவருக்கு நான் அதிகமாக சமைத்து கொடுத்ததில்லை.கல்லூரி நாட்களில் சில முறை மட்டுமே செய்திருக்கிறேன்.ஆனால் நான் செய்யும் வெஜிடபிள் பிரியாணி, மீன் குழம்பு போன்ற உணவுகளை ரசித்து சாப்பிடுவார்.

படிப்பறிவு இல்லாதவர் தான்.ஆனால் உங்கள் பேத்தி என்ன படிக்கிறாள் என்று கேட்டால் உடனே எலக்ட்ரானிக் எஞ்சினியர் என்று சொல்வார்.

என்ன அத்தம்மா இங்க்லீஷ் எல்லாம் பேசுறே என்று கேலி செய்தால் எனக்கு எல்லாம் தெரியும் என்று புன்னகைப்பார்.

அத்தம்மா இறந்து இந்த வருடத்துடன் 9 வருடங்கள் ஆகின்றன.அவர் இறந்தது ஒரு கிறிஸ்மஸ் அன்று தான். 

என் அத்தம்மாவை பற்றிய பதிவு போட வேண்டுமென்ற என் நெடுநாள் ஆசை நிறைவேறியது.

நன்றி....

முதல் பதிவு இங்கே :

அத்தம்மாவின் அலம்பல்கள் - 1




வாழைக்காய் பொரியல்

2 கருத்துகள்


வாழைக்காய் பொரியல்

தேவையான பொருட்கள் :
வாழைக்காய் - 2
பூண்டு - 5 பற்கள் 
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
உப்பு - 3/4 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 இணுக்கு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

1.வாழைக்காயை  தோல் எடுத்து நீரில் அலசி சதுரமாக நறுக்கி  கொள்ளவும்.

2.கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் பொடியாக நறுக்கிய பூண்டு, கடுகு, கறிவேப்பிலை சேர்த்து  தாளிக்கவும்.


3.பின் வாழைக்காயை சேர்த்து நன்கு வதக்கவும்.தூள் வகைகள்,உப்பு  சேர்த்து   பிரட்டி மூடி போட்டு வேக விடவும்.தண்ணீர் சேர்க்க வேண்டாம்.



4.வாழைக்காய் வெந்து எண்ணெய் பிரிந்து வரும் பொழுது இறக்கவும்.


எளிதில் செய்ய கூடிய வாழைக்காய் பொரியல் தயார். 
அனைத்து சாத வகைகளுக்கும் நல்ல சைட்டிஷ். 

உருட்டு முட்டை

0 கருத்துகள்


உருட்டு முட்டை

எங்கள் ஊரில் கட்டு சாதம் செய்தால் செய்யும் முதல் தொடுகறி இது தான்.
மழை நேரத்தில் சாப்பிட செமையாக இருக்கும்.சுலபமான செய்முறை தான்.

தேவையான பொருட்கள் : 
முட்டை - 3
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 3/4 ஸ்பூன்
உப்பு - 1/4 ஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை : 
1. முட்டையை வேக வைத்து தோல் உரித்து நடுவில் கீரி வைக்கவும்.
2. சட்டியில் எண்ணெய் விட்டு சூடானதும் முட்டை போட்டு 2 நிமிடம் பிரட்டவும்.

3. ஒரு கிண்ணத்தில் தூள் வகைகள், உப்பு, 2 ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும்.
4. கரைத்து வைத்ததை முட்டையின் மேல் ஊற்றி பிரட்டி விடவும்.

5. மசாலா நன்கு முட்டையில் சேர்ந்ததும் அடுப்பை அணைக்கவும்.



எளிதில் செய்யக் கூடிய உருட்டு முட்டை தயார்.


பிரியாணி, வெரைட்டி ரைஸுடன் பரிமாற நல்ல சைட்டிஷ்.

ரவா தோசை

4 கருத்துகள்




சின்ன வயசுல இருந்தே எங்க ஊர் காளியாகுடி ஹோட்டல் ரவா தோசைக்கு நான் பயங்கர விசிறி.

அப்புறம் அம்மா சுடுற ரவா தோசையும் நல்லா இருக்கும்.
இருந்தாலும் ஹோட்டல்ன்னா 3 வகை சட்னி, சாம்பாரோட செமையா இருக்கும்ல.

என்னவரும் அதே ஹோட்டல் தோசைக்கு அடிக்ட்ன்னு அப்புறம் தான் தெரிஞ்சுது.

ஊரில் என் மாமியார் வீட்டில் அடிக்கடி ரவா தோசை செய்வாங்க.என் கொழுந்தனார் மனைவி அதில எக்ஸ்பர்ட்.நான் சைட்டிஷ் செய்யறதோட நிறுத்திப்பேன்.

சிங்கை வந்ததுல இருந்து நான் எங்க ஊர் ஷ்பெஷல் தோசையை ரொம்ப மிஸ் பண்ணினேன்.

இங்கயும் எந்த வெஜ்-ஹோட்டல் போனாலும் மனசு வேற சாப்பிட நினைச்சாலும் வாய் தானாகவே ரவா தோசைன்னு சொல்லிடுது.
இல்ல கொஞ்சம் யோசிக்கலாம்ன்னு பார்த்தா என் கணவர் ரவா தோசைத்தானேனு அவர் ஆர்டர் பண்ணிடுறார்.வேற வழி?????

எங்க சாப்பிட்டாலும் நம்ம ஊர் ருசி வரலைன்னு சரி நாமளே என் செய்ய கூடாதுன்னு நினைக்க ஆரம்பிச்சேன்.

நம்ம கதை தான் தெரியுமே.இதுக்காகவே ஆஃபிஸில் உட்கார்ந்து எல்லா ப்ளாக்ஸும் பார்த்து கனவுல எழுப்பினாலும் மனப்பாடமா சொல்ற அளவுக்கு தோசை சுட ரெடி ஆனேன்.

நம்ம ரங்ஸ் வேற ட்ரையல்னா இன்னொரு நாள் பாரு பசியோட வரும் போது விளையாடாதன்னு மறைமுகமா எதிர்ப்பை தெரிவிச்சதுனால செய்ய துணிவு வரலை.

இந்த வாரம் நண்பர் குடும்பத்தோட பிக்னிக் போனோம்.
இரவு வர லேட் ஆகும் அதனால ஏதாவது  மாவு ரெடி பண்ணி வச்சுடுனு ரங்ஸ் சொன்னார்.

நானும் உளுந்து அடை செய்யலாம்ன்னு உளுந்து மாவு மட்டும் ரெடி பண்ணி வச்சுட்டு கிளம்பிட்டேன்.

ரங்ஸ் பிக்னிக் முடிஞ்சு வரும் பொழுது என்ன டின்னர்னு கேட்டதுக்கு உளுந்து அடைன்னு சொன்னேன்.உடனே எனக்கு போன தடவையே அது சாப்பிட பிடிக்கலைன்னு (???) சொன்னார்.

சரி அத நம்ம ரவா தோசையா மாத்திடலாம்ன்னு ஒரு திட்டத்தோட வந்தேன்.அரிசி மாவு தான் சேர்க்கணுமா என்ன அப்படின்னு நானே சமாதானம் ஆயிட்டேன்.

உடனே அவசரமா தக்காளி சட்னி ரெடி பண்ணிட்டு அதே சமயம் உளுந்து மாவு பாதி போட்டு, ரவா கொஞ்சம் சேர்த்து உப்பு தயிர் எல்லாம் சேர்த்து கலந்து வச்சேன்.

அப்புறமும் உளுந்து வாசமே வந்தது சரின்னு கொஞ்சம் கோதுமை ரவா சேர்த்தேன்.இப்படியாக ஒர் சட்டி மாவு கரைத்து விட்டேன்.

ரங்ஸை உட்கார சொல்லி தோசை ஊத்தினா கல்லை விட்டு வரவே இல்லை.
அப்புறம் தான் தெரிஞ்சுது 2 நாள் முன்னாடி தோசைக்குனு பழக்கின கல்லுல அவசரத்துல சப்பாத்தி சுட்டது.

உடனே நான்ஸ்டிக் தோசைக்கல்லை வைத்து அதில ஊத்தினா இங்கயும் அதே கதை தான்.

என்னவர் டென்ஷனாகி நான் ஊத்துறேன் நீ சூடு வரும் முன்பே ஊத்தினா எப்படி வரும்னு ஊத்தினா திரும்பவும் அதே கதை தான்.

அதுக்குள்ள வெங்காயம், உப்பு எல்லாம் போட்டு கல்லை வேற சரிப்படுத்துறேன்.

அப்புறம் தான் சொன்னார் கல்லு நல்லா தான் இருக்கு உன் மாவுல தான் பிரச்சனை.

ரங்ஸ் வேற சீக்கிரம் சொல்லு கீழே ஃபுட்கோர்ட் மூடுறதுகுள்ள ஏதாவது சாப்பிட வாங்கவான்னு கேட்டு கடுப்படிக்கிறார்.

உடனே வேகமா யோசிச்சு மீந்த உளுந்து மாவுல தேங்காய், முட்டை எல்லாம் சேர்த்து உளுந்து அடை செஞ்சு சாப்பிட்டாச்சு.

அவ்வளவு மாவு வீணா கீழே கொட்ட மனசே வரலை.எதற்கும் இருக்கட்டும்னு ஃபிரிட்ஜில வச்சேன்.

காலையில எடுத்து பார்த்தா மேல தண்ணீர் தெளிஞ்சு இருக்கு.
உடனே அதை வடிச்சுட்டு துருவிய கேரட், பட்டாணி எல்லாம் சேர்த்து கடுகு முந்திரி எல்லாம் தாளிச்சு போட்டு ரவா இட்லியா ஊத்தியாச்சு.
நானே நம்பலப்பா.சூப்பரா வந்துருக்கு இட்லி.

தக்காளி சட்னி,பொடியோட  சாப்பிட நல்லா இருந்தது.
இந்த சந்தோஷத்துல போட்டோ எடுக்க மறந்துட்டேன் .

ரங்ஸுக்கு ரொம்ப நாளைக்கு அப்புறம் காலைல இட்லி சட்னியோட சூப்பர் ப்ரேக்ஃபாஸ்ட்.
எப்படியோ ரவா தோசைக்கு ஆசைப்பட்டு ரவா இட்லி சாப்பிட்டு வார இறுதியை கொண்டாடியாச்சு.
இந்த மொக்கையை படித்தவர்களுக்கு ரொம்ப்ப்ப்ப்ப நன்றி......

* படத்துல இருக்குற ரவா தோசை கூகிள்ல சுட்டது.





தக்காளி பச்சடி

7 கருத்துகள்



தக்காளி பச்சடி

இது என்னுடைய 50ஆவது பதிவு.

அதனை ஒரு இனிப்புடன் கொண்டாடுவோம் .
அதனால் சுலபமா செய்ய கூடிய ஒரு இனிப்பு வகை உங்களுக்காக.

தேவையான பொருட்கள் : 

பழுத்த தக்காளி - 4
சீனி - 1/2 கப்
முந்திரி - 10
பட்டை - 1 துண்டு
உப்பு - 1/4 ஸ்பூன்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை : 

1. தக்காளியை நறுக்கி கொள்ளவும்.முந்திரியை சிறியதாக வெட்டி வைக்கவும்.
2. சட்டியில் நெய் விட்டு சூடானதும் பட்டை சேர்த்து முந்திரியை சேர்க்கவும்.சிவற விட வேண்டாம்.

3. தக்காளி, உப்பு சேர்த்து குழைய வதக்கவும்.


4. தக்காளி வதங்கியதும் சீனி சேர்த்து அடுப்பை சிம்மில் வைக்கவும்.


5. சீனி முழுவதும் கரைந்து சிவப்பாக பிசுபிசுப்பான பதம் வரும் பொழுது இறக்கவும்.

சுவையான தக்காளி பச்சடி தயார்.

இதனை நெய் சோறு, தால்ச்சா செய்யும் பொழுது சைட்டிஷ் ஆக பரிமாறலாம்.
பிரியாணியுடனும் சாப்பிடலாம்.(நான் சப்பாத்திக்கு, ப்ரெட்க்கு கூட தொட்டு சாப்பிடுவேன் ஜாமை விட செம டேஸ்ட்).

* தக்காளியை சுடுநீரில் வேக விட்டு தோலை உரித்து விட்டு வதக்கி செய்தாலும் ருசியாக இருக்கும்.

* இது கொஞ்சம் எளிதான செய்முறை என்பதால் இப்படி செய்வது.
பழுத்த தக்காளியாக இருந்தால் தான் சுவையாக இருக்கும்.

* விரும்பினால் சிவப்பு ஃபுட் கலர் சேர்க்கலாம்.நான் சேர்க்காமல் தான் செய்துள்ளேன்.

* நான் குடுத்துள்ள அளவில் பாதி போட்டு தான் செய்துள்ளேன்.இங்கு குடுத்துள்ள  அளவு 4 பேருக்கானது.


புடலங்காய் கூட்டு

2 கருத்துகள்


புடலங்காய் கூட்டு

தேவையான பொருட்கள் : 

புடலங்காய்  - 1 
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
தேங்காய் துருவல் - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
உப்பு - 3/4 ஸ்பூன்

தாளிக்க :

கடுகு - 1 ஸ்பூன்
வரமிளகாய் - 2
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் - 2 ஸ்பூன்

செய்முறை : 

1. புடலங்காயை தோலை எடுத்து சிறு துண்டுகளாகவும், வெங்காயத்தை  மெல்லியதாகவும் நறுக்கி கொள்ளவும்.
2.தேங்காயை பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து அரைத்து வைக்கவும்.
3. கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க குடுத்துள்ள பொருட்களை தாளித்து வெங்காயம்,உப்பு சேர்த்து வதக்கவும்.



4. பின்னர் புடலங்காய், மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி 1/4 கப் நீர் சேர்த்து வேக விடவும்.



5. வெந்ததும் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து 5 நிமிடம் கழித்து கூட்டை இறக்கவும்.




எளிதில் செய்ய கூடிய புடலங்காய் கூட்டு தயார்.



எல்லா குழம்பு வகைகளுடனும் பக்க உணவாக சாப்பிட லாம்.

சிக்கன் கொத்து பரோட்டா

4 கருத்துகள்




சிக்கன் கொத்து பரோட்டா

தேவையான பொருட்கள் : 

பரோட்டா - 4
போன்லெஸ் சிக்கன் - 100 கிராம்
வெங்காயம் - 2
பச்சை குடைமிளகாய் - 1/2
சிவப்பு குடைமிளகாய் - 1/2
கேரட் - 1
ஃப்ரோசன் பட்டாணி - 1/2 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/2 ஸ்பூன்
புதினா - சிறிது
உப்பு - 3/4 ஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை : 
1.பரோட்டாவை சுட்டு நீளவாக்கில் சிறு சிறு துண்டுகளாக்கி வெட்டி கொள்ளவும்.


2.வெங்காயத்தை மெல்லியதாகவும், குடைமிளகாயை பொடியாகவும் நறுக்கி கொள்ளவும். கேரட்டை மெல்லிய துண்டுகளாக சீவி கொள்ளவும்.


3.கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் ,உப்பு சேர்த்து வதக்கவும்.பின்னர் சிறிதாக நறுக்கிய சிக்கன், மிளகாய் , கேரட், இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.



4.தயிர் , தூள் வகைகள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை பிரட்டவும்..


5.வெட்டி வைத்துள்ள பரோட்டாவை மசாலாவில் சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.வேண்டுமென்றால் சிறிது நீர் தெளிக்கலாம்.


6.கடைசியாக புதினா சேர்க்கவும்.



2 முட்டைகளை தனியாக கொத்தி கூட சேர்க்கலாம்.சுவையாக இருக்கும்.

விருந்தினர் வந்தால் சுலபமாக செய்து அசத்தலாம்.லன்ச்க்கும் சாப்பிட நன்றாக இருக்கும்.


ப்ரோக்கோலி சிக்கன் ஃப்ரை

4 கருத்துகள்


ப்ரோக்கோலி சிக்கன் ஃப்ரை
தேவையான பொருட்கள் :

ப்ரோக்கோலி - 1
வெங்காயம் - 1
சிக்கன் - 100 கிராம்
இஞ்சிபூண்டு விழுது - 1/2 ஸ்பூன்
சிக்கன் 65 மசாலா - 2 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
பெருஞ்சீரகம் - 1 ஸ்பூன்
மல்லி, புதினா - சிறிது
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை : 

1. ப்ரோக்கோலியை சிறு பூக்களாக பிரித்துக் கொள்ளவும்.சிக்கனை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
2. வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கி கொள்ளவும்.
3. கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, பெருஞ்சீரகம் தாளித்து    வெங்காயம் சேர்க்கவும். இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை  போகும் வரை வதக்கவும்.

4. பின்னர் ப்ரோக்கோலி , சிக்கனை சேர்த்து வதக்கவும்.


5. சிக்கன் 65 மசாலா  சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.மூடி போட்டு வேக விடவும்.

6. 5 நிமிடத்தில் வெந்து விடும்.


மிகவும் எளிதில் செய்யக் கூடிய சத்தான ப்ரோக்கோலி சிக்கன் ஃப்ரை ரெடி.அனைத்து சாத வகைகளுடனும் சைட்டிஷ் ஆக சாப்பிடலாம்.


ப்ரெட்டில் இந்த ஃப்ரையை வைத்து சாண்ட்விச் போல்  சாப்பிட்டாலும் நன்றாக இருக்கும்.

அத்தம்மாவின் அலம்பல்கள் - 1

2 கருத்துகள்



அத்தம்மாவின் அலம்பல்கள்

என் தந்தையை பெற்ற அம்மாவை தான் நாங்கள் அத்தம்மா என்று அழைப்போம்.

என் அத்தம்மாக்கு நான் ஒரே செல்ல பேத்தி.அதிலும் நான் படிப்பிற்காக சிறு வயது முதலே அம்மா வழி பாட்டி வீட்டில் வளர்ந்ததால் விடுமுறை நாட்களில் மட்டுமே அத்தம்மா, அப்பாவை காண வருவேன்.

என் தந்தையும் எனது முழு ஆண்டு விடுமுறையை ஒட்டி தான் இந்தியா வருவார்.
அத்தம்மாவிற்கு நான் என்றால் எப்பொழுதுமே ஷ்பெஷல் தான்.
என்னிடம் அவருக்கு மிகுந்த பாசம்.

அவரை பற்றிய சில இனிமையான நினைவுகள்.

எங்கள் வீடு பஸ் ஸ்டாப்பிற்கு வெகு அருகில் இருக்கும்.அது மிகவும் சிறிய ஊர் என்பதால் 3 மணி நேரத்திற்கு ஒரு முறை தான் பஸ் வரும்.

எங்கள் வீடு திண்ணையில் தான் பஸ்ஸிற்கு போகும் நபர்கள் அமர்ந்திருப்பார்கள்.அவர்களில் பெரும்பாலும் உறவினர்கள் தான்.

திண்ணைக்கும் வரும் என் அத்தம்மா அவர்களிடம் பேசி கொண்டிருப்பார்.
1 மணி பஸ்ஸுக்கு வருபவர்களிடம் என்ன விஷயமாக செல்கிறாய்?சாப்பிடாயா என்று  கேட்பார்.அவர்கள் 12 மணிக்கே சாப்பிட்டு விட்டேன் ஆச்சி என்று சொன்னால் பரவாயில்லை நம்ம வீட்டில் ஒரு வாய் காபி சாப்பிடு பஸ் வர நேரமாகும் என்பார்.அவர் மறுத்தாலும் மருமகள்களிடம் சீக்கிரம் காபி நொறுக்குதீனி எடுத்து வா என்று விடுவார்.

அவர்கள் சில நேரம் சாம்பார், புளி குழம்பு சாப்பிட்டேன் என்று கூறினால் அவ்வளவு தான் நம் வீட்டில் இன்று மீன் வாங்கி சமைத்தேன் ஒரு வாய் சாப்பிடு என்று கட்டாயப்படுத்தி அழைத்து வந்து விடுவார்.

அவர்கள் கெஞ்ச கெஞ்ச பலமான உபசாரம் தான்.இவர் குணம் அறிந்து என் பெரியம்மா, அம்மா யார் சமைத்தாலும் 2 பேருக்கு அதிகமாக சேர்த்து தான் சமைப்பார்கள்.சில நேரம் 4 ,5 பேர் அழைத்து வந்தால் மறு உலை தான் வைப்பார்கள்.

இதில் ஹைலைட் என்னவென்றால் அவர்கள் சாப்பிடும் நேரத்தில் முக்கால்வாசி நேரம் பஸ் போய் விடும்.அப்புறமென்ன அடுத்த பஸ் வரும்வரை பேசிக் கொண்டிருக்க வேண்டியது தான் :)

என் அத்தம்மாவின் இந்த கவனிப்பிற்கு பயந்து சில பேர் தப்பிக்க நினைத்தாலும் என் அப்பா கூப்பிட்டு விடுவார்.

ஒருமுறை நான், அம்மா, அத்தம்மா ,என் பெரியப்பா மகன் நால்வரும் கண் செக்கப்பிற்கு சென்றோம்.

அத்தம்மாவிற்கு தான் செக்கப்.அம்மாவிற்கு அடிக்கடி தலைவலி வருவதால் அவரையும் செக்கப் செய்து கொள் என்று அத்தம்மா கூறினார். இருவர் கண்ணிலும் ட்ராப்ஸ் போட்டு உள்ளே சென்றாகி விட்டது.

முதலில் அத்தம்மாவிற்கு தான் செக்கப்.படிக்க டாக்டர் ஆங்கில எழுத்து, தமிழ் எழுத்து காட்டுகிறார் அத்தம்மாவிற்கு படிக்க தெரியாது.

உடனே அத்தம்மா என்ன செய்தார் தெரியுமா? கையோடு எடுத்து சென்றிருந்த கையடக்க குரானை எடுத்து ஓத ஆரம்பித்து விட்டர்.இப்பொழுது டாக்டர் முழிக்கிறார்.

எனக்கு தெரியாதுமா நீங்க படிக்கிறது என்றதும் என் பேரன் பேத்திக்கு தெரியும் நான் சரியாக தான் படிக்கிறேன் என்று சொல்கிறார்.அப்பொழுது நான் நான்காவதும் அண்ணன் ஆறாவதும் படித்தோம்.

பிறகு என் அம்மாவை அழைத்து கூறியதும் அவர் உடனே நம்பர் காண்பியுங்கள் டாக்டர் எண்று கூறி நிலைமையை சரி செய்தார்.

அந்த டாக்டர் பட்ட பாட்டை இப்பொழுது நினைத்தாலும் சிரிப்பு வரும்.

இப்படி என் அத்தம்மாவை பற்றி சொல்லி கொண்டே போகலாம்.
பதிவு நீளமாக செல்வதால் இன்னொரு பதிவில் மீதியை தொடர்கிறேன்.

நன்னாரி கடல்பாசி

2 கருத்துகள்



நன்னாரி கடல்பாசி

தேவையான பொருட்கள் :

கடல்பாசி - கைப்பிடி அளவு
சீனி - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - 1/4 ஸ்பூன்
நன்னாரி சிரப் - 2 டேபிள் ஸ்பூன்
பாண்டன் இலை - 4 துண்டு
தண்ணீர் - 3 கப்

செய்முறை :
1. பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்..
2. லேசாக கொதி வந்ததும் கடல்பாசியை சேர்த்து நன்கு கரையும் வரை கைவிடாமல் கிளறவும்.பாண்டன் இலையை கழுவி விட்டு அதில் போடவும்.



3.பின்னர் சீனி , உப்பு சேர்த்து கரைந்து வந்ததும் நன்னாரி சிரப் சேர்த்து அடுப்பை அணைக்கவும்..


4.அகலமான தட்டில் வடிகட்டி ஆறவிடவும்..


5.ஆறியதும் துண்டுகள் போட்டு பரிமாறவும்...ஃபிரிட்ஜில் வைத்து சில்லென்று  சாப்பிட்டாலும் நன்றாக இருக்கும்.


பாண்டன் இலை, நன்னாரி வாசத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes