தேவையான பொருட்கள் :
தக்காளி - 3
வரமிளகாய் - 4
கடலை பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
வெள்ளை உளுந்து - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - 3/4 ஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
தாளிக்க :
கடுகு - 1/2 ஸ்பூன்
கறிவடகம் - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
1. கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் வரமிளகாயை கருகாமல் வறுத்து எடுக்கவும்.
2. பின்னர் பருப்பு வகைகளை சிவக்க வறுத்து எடுத்து கொள்ளவும்.
3. அதனுடன் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.
4. வரமிளகாய், பருப்பு வகைகள், உப்பு சேர்த்து மிக்சியில் இரண்டு சுற்றுகள் அரைத்ததும் தக்காளியை சேர்த்து நீர் சேர்க்காமல் அரைத்து கொள்ளவும்.
5. தாளிக்க குடுத்துள்ளவற்றை தாளித்து சட்னியில் சேர்த்து கலந்து விடவும்.
எளிதில் செய்ய கூடிய சுவையான தக்காளி சட்னி தயார்.
இட்லி, தோசை, ஆப்பத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...