சிக்கன் பிரியாணி
தேவையான பொருட்கள் :
பாஸ்மதி அரிசி - 2 கப்
சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 4
இஞ்சிபூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
பிரியாணி மசாலா - 2 ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
சீரக தூள் - 1/2 ஸ்பூன்
பட்டை - 2 துண்டு
கிராம்பு , ஏலக்காய் - 2
உப்பு - 2 ஸ்பூன்
தயிர் - 1 கப்
மல்லிதழை , புதினா - 1/2 கப்
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
முந்திரி - 6
திராட்சை - 10
எண்ணெய் - 1/2 கப்
நெய் - 4 டேபிள் ஸ்பூன்
புதிதாக பிரியாணி செய்பவர்கள் இந்த முறையில் செய்தால் அடிபிடிக்குமே என்ற கவலை இல்லாமல் இருக்கலாம்.
* காரம் குறைவாக சாப்பிடுபவர்கள் பச்சை மிளகாய், மிளகாய் தூள் அளவை குறைத்துக் கொள்ளலாம்.
செய்முறை :
1. பாஸ்மதி அரிசியை களைந்து தண்ணீரில் 20 நிமிடம் நேரம் ஊற வைக்கவும்.
2.வெங்காயம்,தக்காளியை மெல்லியதாக நறுக்கி கொள்ளவும்.
பச்சை மிளகாயை நடுவில் கீறி வைக்கவும். கோழியை சுத்தம் செய்து வைக்கவும்.
3. குக்கரில் நெய், எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், 1ஸ்பூன் உப்பு சேர்த்து வதக்கவும்.
4. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பச்சை வாசம் போனதும் தக்காளி, மல்லி, புதினா சேர்த்து குழைய வதக்கவும்.
5. பின்னர் கோழி துண்டுகள், தூள் வகைகள், தயிர் சேர்த்து பிரட்டி விடவும்.
6. குருமாவில் 1 கப் நீர் சேர்த்து 2 விசில் வரும் வரை வேக விடவும்.
7. பெரிய பானில் வெந்த கோழி குருமாவை ஊற்றி அத்துடன் 2 கப் தண்ணீர், 1 ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து விடவும்.
8. தண்ணீர் கொதி வந்ததும் பாஸ்மதி அரிசியை சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.
9. வெங்காயம், முந்திரி, திராட்சையை சிவக்க வறுக்கவும்.
10. பிரியாணி வெந்ததும் மேலே வறுத்த முந்திரி, திராட்சை, வெங்காயம், மல்லி புதினா ஆகியவற்றை தூவி விடவும்.
11. பின்னர் அனைத்தையும் ஒருசேர அரிசி உடையாமல் பிரட்டி விடவும்.
கமகமக்கும் சூடான சிக்கன் பிரியாணி தயார்.
புதிதாக பிரியாணி செய்பவர்கள் இந்த முறையில் செய்தால் அடிபிடிக்குமே என்ற கவலை இல்லாமல் இருக்கலாம்.
இதனை ஆனியன் ரைத்தா, முட்டையுடன் பரிமாறலாம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...