நெய் சோறு


நெய் சோறு

தேவையான பொருட்கள் : 


புலாவ் அரிசி - 2 கப்

வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
பட்டை - 2 துண்டு
கிராம்பு, ஏலம் - தலா 2
மல்லி, புதினா - 1/2 கப்
பாண்டான் இலை - 2 துண்டு 
இஞ்சிபூண்டு விழுது - 2 ஸ்பூன்
தயிர் - 1/2 கப்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - 1 ஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை : 


1. அரிசியை களைந்து 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்.


2. வெங்காயம், தக்காளியை மெல்லியதாக நறுக்கி கொள்ளவும். மிளகாயை நடுவில் கீறி வைக்கவும்.


3. அரிசியை 3 கப் நீர், உப்பு சேர்த்து எலக்ட்ரிக் குக்கரில் கொதிக்க விடவும். 
4. பானில் எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலம், பாண்டான் இலை தாளித்து வெங்காயம், தக்காளி, மிளகாய், மல்லி, புதினா சேர்த்து வதக்கவும்.




5. இஞ்சிபூண்டு சேர்த்து வதக்கி பச்சை வாசம் போனதும் தயிர் சேர்க்கவும்.




6. இதனை அரிசியில் கொட்டி நன்கு கலந்து விடவும். 20 நிமிடத்தில் சோறு வெந்து விடும்.



மணமான நெய் சோறு தயார்.


இதனை தால்ச்சா அல்லது சிக்கன், மட்டன் குழம்பு வகைகளுடன் சாப்பிடலாம்.


சைவம் விரும்புவர்கள் வெஜ் குருமாவுடன் சாப்பிட்டாலும் நன்றாக இருக்கும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes