தேங்காய்பால் கஞ்சி




தேங்காய்பால் கஞ்சி

தேவையான பொருட்கள் : 

புழுங்கல் அரிசி - 1/2 கப்
தேங்காய்பால் - 1 கப்
முழுபூண்டு - 1
வெந்தயம் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை : 

1. அரிசியை களைந்து கொள்ளவும். குக்கரில் அரிசியுடன் உரித்த பூண்டு, வெந்தயம், உப்பு ஆகியவற்றுடன் 4 கப் நீர் சேர்த்து குழைய வேக வைக்கவும். / 4 விசில் சரியாக இருக்கும்.





2. ஆவி அடங்கியதும் குக்கரை திறந்து நன்கு கஞ்சியை மசித்து பின் தேங்காய்பால் சேர்த்து ஒரு கொதி விடவும்.



3.பூண்டு வாசத்துடன் சுவையான தேங்காய்பால் கஞ்சி தயார்.




இதனுடன் புளி சம்பல் சேர்த்து  சாப்பிட சுவையாக இருக்கும்.என் கணவர் வீட்டில் கஞ்சியுடன் மோர் மிளகாய் ,கீரை வத்தல் ,அரிசி படையான் பொரித்தும் தருவார்களாம்.

சிறு வயதில் வீட்டில் மாதம் இருமுறையாவது இந்த கஞ்சி செய்வார்கள்.

இஸ்லாமிய இல்லங்களில் செய்யப்படும் பாரம்பரியமான சிற்றுண்டி இது.

2 கருத்துகள்:

  1. சத்தான கஞ்சி , புளி சம்பல் என்றால் என்னை? புளி வெங்காயம் சேர்த்து சட்னியா?
    போனவாரம் ஊரில் இருந்து வல்லாரை கீரை வந்தது, தேங்காயுடன் அரைத்து செய்தேன்,

    பதிலளிநீக்கு
  2. புளி சம்பல் தனி பதிவு போடுறேன் ஜலீலா அக்கா.
    வல்லாரை சம்பல் என்னவர் விரும்பி சாப்பிடுவார்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes