தேவையான பொருட்கள்:
தயிர் - 1 கப்
தேங்காய் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 2
சீரகம் - 1 ஸ்பூன்
அரிசி - 2 ஸ்பூன்
துவரம் பருப்பு - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - 1 ஸ்பூன்
தாளிக்க:
கடுகு - 1 ஸ்பூன்
கறிவடகம் - 1 ஸ்பூன்
வரமிளகாய் - 2
கறிவேப்பிலை - 1 கொத்து
நல்லெண்ணை - 1 ஸ்பூன்
செய்முறை :
1. அரிசி, பருப்பை 1/2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
2. மிக்சியில் அரிசி பருப்புடன் தேங்காய், சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
3. தயிருடன் 1 கப் தண்ணீர், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து கொள்ளவும்.
4.அதனுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையையும் சேர்த்து திக்காக குழம்பு பதத்திற்கு கலந்து அடுப்பில் வைக்கவும்.
5. குழம்பு நுரைத்து வந்ததும் தாளிக்க குடுத்துள்ள பொருட்களை தாளித்து மோர் குழம்பில் சேர்க்கவும்.
சுவையான மோர் குழம்பு தயார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...