தேவையான பொருட்கள் :
அரிசி மாவு - 2 கப்
இறால் - 1/4 கிலோ
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
துருவிய தேங்காய் - 1 கப்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
சீரக தூள் - 1/4 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு - 1 ஸ்பூன்
எண்ணெய்- 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
1. வெங்காயம்,பச்சை மிளகாயை மெல்லியதாக நறுக்கி கொள்ளவும்.இறாலை சுத்தம் செய்து சிறியதாக நறுக்கி கொள்ளவும்.
3. பின்னர் இறால், உப்பு, கறிவேப்பிலை, தூள் வகைகள் சேர்க்கவும்.
* காரமாக வேண்டும் என்றால் மிளகாய் அளவை கூட்டி கொள்ளலாம்.
* மல்லி புதினா இருந்தால் பொடியாக நறுக்கி போட்டாலும் மணமாக இருக்கும்.என்னிடம் கைவசம் இல்லாததால் நான் சேர்க்கவில்லை.
*என் மாமியார் இறாலை வேக வைத்து மிக்சியில் 2 சுற்று சுற்றி போடுவார்கள். அதுவும் நன்றாக இருக்கும்.
*ஆவியில் வேக வைப்பதால் அனைத்து வயதினரும் பயமின்றி சாப்பிடலாம்.
கொழுக்கட்டைகளை படமெடுக்க மறந்து விட்டேன்.கடைசியாக மீந்த ஒரு கொழுக்கட்டை வைத்து ஒப்பேற்றி உள்ளேன்.அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.......