தேவையான பொருட்கள் :
கடல்பாசி - கைப்பிடி அளவு
சீனி - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - 1/4 ஸ்பூன்
நன்னாரி சிரப் - 2 டேபிள் ஸ்பூன்
பாண்டன் இலை - 4 துண்டு
தண்ணீர் - 3 கப்
செய்முறை :
1. பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்..
2. லேசாக கொதி வந்ததும் கடல்பாசியை சேர்த்து நன்கு கரையும் வரை கைவிடாமல் கிளறவும்.பாண்டன் இலையை கழுவி விட்டு அதில் போடவும்.
3.பின்னர் சீனி , உப்பு சேர்த்து கரைந்து வந்ததும் நன்னாரி சிரப் சேர்த்து அடுப்பை அணைக்கவும்..
4.அகலமான தட்டில் வடிகட்டி ஆறவிடவும்..
5.ஆறியதும் துண்டுகள் போட்டு பரிமாறவும்...ஃபிரிட்ஜில் வைத்து சில்லென்று சாப்பிட்டாலும் நன்றாக இருக்கும்.
பாண்டன் இலை, நன்னாரி வாசத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
ரொம்ப நல்லா இருக்கு ஷமி... நானும் அடிக்கடி பண்ணுவேன்...
பதிலளிநீக்குகருத்துக்கு நன்றி அபினயா..
பதிலளிநீக்கு