தேவையான பொருட்கள் :
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
புளி - சிறிய எலுமிச்சை அளவு
திக்கான தேங்காய் பால் - 1 கப்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
கறிமசாலா தூள் - 1 ஸ்பூன் (அல்லது)
தனியா தூள் - 1 ஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது - 1 ஸ்பூன்
உப்பு - 1 ஸ்பூன்
கறிவடம் - சிறிது
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
1. வெங்காயம், தக்காளியை மெல்லியதாகவும் மிளகாயை நடுவில் கீறியும் வைக்கவும்..புளியை 1 கப் வருமளவு கரைத்து கொள்ளவும். தேங்காயை துருவி திக்காக பால் எடுத்து கொள்ளவும்.
3. இதனை ஒரு சட்டியில் வைத்து கொதி வந்ததும் அடுப்பை அணைத்து தேங்காய்பால் சேர்த்து கலந்து விடவும்.
4. பின்னர் பானில் எண்ணெய்விட்டு சூடானதும் கறிவடம், மிளகாய் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து ரசத்தில் சேர்க்கவும்.
தாளிப்பிற்கு நெய் பயன்படுத்தினால் இன்னும் வாசமாக இருக்கும்.
சுவையான தேங்காய்பால் ரசம் தயார்.
இதனை மட்டன் குழம்பு / சிக்கன் குழம்புடன் சேர்த்து சாதத்துடன் கலந்து சாப்பிட சுவையாக இருக்கும்.
ப்ளைன் சாதத்துடனும் சாப்பிட நன்றாக இருக்கும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...