சிங்கப்பூரின் சிற்பி


சிங்கப்பூரின் சிற்பி என்று அனைவராலும் அழைக்கப்படும்
முன்னாள் பிரதமர் லீ க்வான் யூ இன்று (23.03.2015) அதிகாலை 3.18 க்கு காலமானார்.
துறைமுக நகரமாக இருந்த சிங்கப்பூரை புகழ்மிக்க வர்த்தக நகரமாக மாற்றிய பெருமை திரு.லீயையே சென்றடையும்.
இந்த ஆண்டு 50 ஆவது சுதந்திர தினத்தை மிக கோலாகலமாக கொண்டாட திரு.லீ உத்தரவிட்டிருந்தார்
அதற்கான கொண்டாட்டங்களில் இப்பொழுதிலிருந்தே மக்கள் ஆயத்தமாகி வருகிறார்கள்.
அதற்காக அரசும் பல்வேறு விதமான சலுகைகளை இந்நாட்டு மக்களுக்கு அனைத்து துறைகளிலும் வழங்கி வருகிறது.
இந்த நேரத்தில் திரு.லீ அவர்களின் மறைவு இந்நாட்டில் வசிக்கும் அனைவரையும் மிக வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

"சிங்கப்பூரை பொறுத்தவரை இந்தியர்கள் என்றால் தமிழர்கள்.
இந்திய மொழி எனில் தமிழ்மொழி. 
எனவே தமிழ் தான் இங்கு ஆட்சிமொழி. 
இந்திக்கு இங்கு இடமில்லை " 

என்று நம் தமிழர்களுக்காக பாடுபட்டவர் திரு. லீ.

ஒரு உன்னதமான தலைவரை சிங்கப்பூர் மட்டுமல்ல இந்த உலகமே இழந்து விட்டது.
இது போல் மீண்டும் ஒருவர் பிறந்து பலரது அன்பை சம்பாதித்து மிக சிறந்த மனிதராக பொது வாழ்க்கையில் வாழ்வது சந்தேகத்திற்க்குரியதே.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes