பெருநாள் நினைவுகள் - 2





பெருநாள் நினைவுகள் - 2

தொழுகை , பசியாற எல்லாம் முடிந்து  சிறியவர்கள் நெருங்கிய உறவினர் வீடுகளுக்கு போக வேண்டும்.நாம் அணிந்த புதிய உடைகளை காண்பிப்பதற்கு.போகவில்லை என்றால் கோபித்து வேறு கொள்வார்கள்.பெருநாள் அன்று ஏன் வரவில்லையென !!


அங்கு பெருநாள் பணம் வேறு குடுப்பார்கள்.அப்பொழுது 10 ரூபாய்,20 ரூபாயே பெரிய காசு.இப்பொழுது 100, 200 ரூபாய்க்கு கூட அந்த அளவு மரியாதை இல்லை.

என் தாத்தாவிற்கு பிடிக்காது என நான் எவ்வளவு வற்புறுத்தினாலும் யார் வீட்டிலும் வாங்க மாட்டேன்.வீட்டில் அம்மா, பாட்டி, தாத்தாவிடம் மட்டும் தான் நம்ம கலெக்க்ஷன் எல்லாம்.

பெருநாள் தொழுகை,உணவு முடிந்த பின்னர் அடுத்து செல்வது பெருநாள் கொல்லைக்கு தான்.
இது கிராமத்தில் ரொம்ப ஃபேமஸ்.

எங்கள் பாட்டி ஊரில் 2, 3 இடங்களில் இது செய்வார்கள். எங்கள் தாத்தாவுடைய அப்பா வீட்டில் இது செய்வதால் நாங்கள் எப்பொழுதும் அங்கு தான் செல்வது.

எனது மாமாக்கள், சித்திகள் என்று உறவினர்களுடன் பொழுது சுவாரசியமாக போகும்.அக்கம் பக்கத்திலுள்ள பெண்களும், குழந்தைகளும் கலந்து கொள்வார்கள். 50 பேருக்கு மேலேயே வருவார்கள்.

அங்கு சாப்பிடவும் நிறைய திண்பண்டங்கள் விற்பார்கள்.உள்ளூரில் இருக்கும் பெண்கள் தான் செய்து விற்பது எல்லாம்..முழுக்க பெண்களும் குழந்தைகளும் இருக்கும் இடம் என்பதால் ஆண்களுக்கு அனுமதி இல்லை.மாமாக்கள் வந்து எங்களுக்கு ஆடுவதற்க்கு மரங்களில் ஊஞ்சல் கட்டி கொடுப்பதோடு சரி.பிறகு வர மாட்டார்கள்.

அந்த ஊஞ்சலில் இருபுறமும் பெண்கள் உந்த ஆடுவது பெரிய சுகம்.நான் உந்த எனது அம்மா, சித்திகள் அனுமதித்ததே இல்லை.நீ பேசாமல் உட்கார் என்று சொல்லி விடுவார்கள்.அதிலும் ஒரு சித்தி என்னை எப்பொழுதும் கயிறு கட்டும் பக்கத்தில் தான் உட்கார வைப்பார்.என் மேல் அவ்வளவு நம்பிக்கை.ஆனால் அவர் மட்டும் நாள் முழுவதும் ஆடுவார்..


அம்மா கூட வந்தால் திண்பண்டங்கள் சாப்பிட நிறைய தடைகள்.சர்பத் வேண்டாம் சளி பிடிக்கும் என்று  சொல்வார்கள்.அம்மா வராமல் நான் மட்டும் தோழிகளுடன் போனால் ஜாலியாக இருக்கும்..இஷ்டத்துக்கு சாப்பிடலாம்.இருட்டும் வரை ஊஞ்சல் ஆடிவிட்டு வரலாம்.

இப்பொழுது பெருநாள் அன்று தொழுகை சாப்பாடு முடிந்த பின்னர் நான் விரும்பி செய்வது தூங்குவது தான் :)

இரவு நேரங்களில் உறவினர் நண்பர்களை சந்தித்து மகிழ்வதும் உண்டு.


சிறுவயது பெருநாள் கொண்டாட்டங்கள் தான் மனதிலே இன்றும் பசுமையாக நினைவுக்கு வருகிறது.அவற்றை நினைத்து பார்த்து மகிழ்வதும் சுகம்தானே.. 

முதல் பகுதியை படிக்க :


2 கருத்துகள்:

  1. அருமையான பதிவு. நீங்கள் சொன்ன மாதிரி சிறுவயது சந்தோஷங்கள் தான் மனதில் இன்றும் இருக்கிறது. நிறைய எழுதுங்கள். நேரம் கிடைக்கும் போது சமையல் பதிவும் கொடுங்கள். எனது இன்றைய பதிவு முட்டை ஆம்லெட் !

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மா..

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes