சாதாரண ரவையில் செய்யும் உப்புமாவை விட இது சுவையானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கிறது.
எனக்கு மிகவும் பிடித்திருந்தது.அதனால் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் :)
தேவையான பொருட்கள் :
கோதுமை ரவை - 1 கப்
வெங்காயம் - 1
பால் - 1/2 கப்
கடுகு - 1 ஸ்பூன்
வரமிளகாய் - 2
கடலைபருப்பு - 2 ஸ்பூன்
முந்திரி - 5
கறிவேப்பிலை - 1கொத்து
உப்பு - 1 ஸ்பூன்
எண்ணெய் / நெய் - 1 கரண்டி
செய்முறை :
1.வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கி கொள்ளவும்.
2.பானில் எண்ணெய்/நெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் உப்பு சேர்த்து வதக்கவும்.பின்னர் கடுகு, வரமிளகாய், கடலைபருப்பு, முந்திரி, கறிவேப்பிலை சேர்க்கவும்.
2. எல்லாம் பொன்னிறமாக வதங்கியதும் 1 கப் தண்ணீர்,1/2 கப் பால் சேர்த்து கொதிக்க விடவும்.பின்னர் ரவையை சேர்க்கவும்.
3. மூடி போட்டு நீர் வற்றும் வரை வேக விடவும்.
4. சூடான கோதுமைரவை உப்புமா தயார்.
சட்னி சாம்பாருடன் சாப்பிடலாம்.
இட்லி பொடி தூவி சாப்பிட்டாலும் நன்றாக இருக்கும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...