தேவையான பொருட்கள் :
உளுத்தம் பருப்பு - 1/2 கப்
கடலை பருப்பு - 1/2 கப்
வரமிளகாய் - 20
கறிவேப்பிலை - 2 கொத்து
பெருங்காயம் - 4 துண்டுகள்
பூண்டு - 10 பல்
உப்பு - 1 ஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
1. பானில் எண்ணெய் விட்டு சூடானதும் பருப்பு வகைகளை சேர்த்து நன்கு சிவக்க வறுத்து கொள்ளவும்.
2. பின்னர் வரமிளகாய், கறிவேப்பிலை இரண்டையும் சூடு வரும் வரை வறுத்து எடுக்கவும்.
3. நல்லெண்ணெய் விட்டு சூடானதும் பெருங்காயம், பூண்டு பற்கள் சேர்த்து சிவக்க வறுத்து வைக்கவும்.
4. அனைத்தும் ஆறியதும் மிக்சியில் போட்டு உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.
சுவையான இட்லி பொடி தயார்.
காரம் அதிகம் விரும்புவோர் மிளகாயின் அளவை அதிகரித்து கொள்ளலாம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...