கட்டு சோறு
தேவையான பொருட்கள் :
அரிசி - 2 கப்
புளி - எலுமிச்சை அளவு
தேங்காய் - 1
உப்பு - 2 ஸ்பூன்
தாளிக்க :
கடுகு - 2 ஸ்பூன்
வரமிளகாய் - 4
கறிவடகம் - 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கொத்து
நல்லெண்ணெய் - 1/2 கப்
செய்முறை :
1. அரிசியை களைந்து 1 ஸ்பூன் உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வடித்து வைக்கவும் அல்லது குக்கரிலும் சோறாக ஆக்கி கொள்ளவும்.
2. புளியை ஒரு மணி நேரம் ஊற வைத்து ஒரு கப் அளவிற்கு சாறு எடுத்து கொள்ளவும்.
3. தேங்காயை பிழிந்து பால் எடுத்து வைக்கவும்.
4. ஒரு பாத்திரத்தில் புளி தண்ணீர், தேங்காய்ப்பால், 1 ஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு கலந்து வைத்து கொள்ளவும்.
5. கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, வரமிளகாய், கறிவடகம், கறிவேப்பிலை தாளித்து புளி கலவையை சேர்க்கவும்.
7. பின்னர் சோறை அதனுடன் நன்கு கலந்து விட்டு 30 நிமிடம் மூடி வைத்து பின்னர் பரிமாறவும்.
சுவையான கட்டு சோறு தயார்.
இது ஒரு பாரம்பரிய உணவாகும்.
சிலர் இதில் மஞ்சள் தூள் சேர்ப்பார்கள். ஆனால் எங்கள் வீட்டு செய்முறை இது தான்.
விருப்பமான தொடுகறிகளுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
மதியம் செய்து இரவில் சாப்பிடும் பொழுது இன்னும் சுவை கூடும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...