தேவையான பொருட்கள் :
பூண்டு - 20 பல்
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
சாம்பார் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - 3/4 ஸ்பூன்
கறிவடகம் - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
1. பூண்டை தோல் உரித்து வைக்கவும். சின்ன வெங்காயத்தை சதுரமாக நறுக்கவும். தக்காளியை மெல்லியதாகவும், மிளகாயை நடுவில் கீறியும் வைக்கவும்.
2. பானில் எண்ணெய் விட்டு சூடானதும் கறிவடகம், கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும்.
3. வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
4. பின்னர் தூள் வகைகள் சேர்த்து பிரட்டி விடவும். 1 கப் தண்ணீர் சேர்த்து கலந்து விடவும்.
5. குழம்பு கொதித்து மசாலா வாசம் போனதும் 5 நிமிடம் சிம்மில் வைத்து குழம்பை இறக்கவும்.
6. எண்ணெய் பிரிந்து பூண்டு குழம்பு மணமாக இருக்கும்.
ருசியான பூண்டு குழம்பு தயார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...