ஸ்பைசி பனீர் க்ரேவி
தேவையான பொருட்கள் :
பனீர் - 200 கிராம்
வெங்காயம் - 1
தக்காளி - 3
பட்டை - 1 துண்டு
கிராம்பு, ஏலக்காய் - 2
சீரகம் - 1/4 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
மல்லி தூள் - 1 ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - 1 ஸ்பூன்
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 8
பால் - 1/4 கப்
செய்முறை :
1. பனீரை சதுர துண்டுகளாக நறுக்கி வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். தக்காளியை மிக்சியில் விழுதாக அரைத்து கொள்ளவும். முந்திரியை மிக்சியில் தூள் செய்து வைக்கவும்.
2. ஒரு பவுலில் பனீருடன் 1 ஸ்பூன் மிளகாய் தூள், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 ஸ்பூன் உப்பு, 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பனீர் கலவையை 30 நிமிடம் ஊற விடவும்.
3. பானில் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
4. வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
5. பின்னர் தூள் வகைகள், உப்பு சேர்க்கவும். மசாலா வாசம் போனதும் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும்.
6. மசாலாவுடன் முந்திரி தூள் சேர்த்து கலந்து விடவும். ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
7. இன்னொரு பானில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் பனீர் கலவையை சேர்த்து வதக்கவும்.5 நிமிடம் கழித்து எடுத்து கொள்ளவும்.
8. க்ரேவி கொதித்து வந்ததும் பால் சேர்த்து விடவும். இறுதியாக வறுத்து வைத்த பனீர் துண்டுகளை சேர்த்து விடவும்.
9. க்ரேவி இறக்கும் பொழுது மிளகு தூள், நெய் சேர்த்து கலந்து விடவும்.
ஸ்பைசி பனீர் க்ரேவி தயார்.
ரெஸ்டாரன்ட் சுவையில் வீட்டிலேயே சுலபமாக செய்து அசத்தலாம்.
* கடைசியாக கசூரி மேத்தி சேர்க்க வேண்டும். என்னிடம் இல்லாததால் மிளகு தூள் சேர்த்து செய்திருக்கிறேன்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...