தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு - 2
மட்டன் ஈரல் - 1/2 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 2
முந்திரி - 6
தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மல்லி தூள் - 1 ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
சீரக தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - 1 ஸ்பூன்
எண்ணெய் - 2 தேக்கரண்டி
மல்லிதழை - சிறிது
செய்முறை :
1. வெங்காயம், தக்காளியை மெல்லியதாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை நடுவில் கீறி வைக்கவும். உருளையை சதுர வடிவில் துண்டுகளாக்கி கொள்ளவும்.
2. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்பு சேர்த்து தாளிக்கவும்.
3. பின்னர் வெங்காயம், தக்காளி, மிளகாய் சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு சேர்க்கவும்.
3. பச்சை வாசம் போனதும் ஈரல், உருளை, முந்திரி சேர்த்து வதக்கவும்.
4. சிறிது நேரம் வதங்கியதும் தூள் வகைகள், தயிர், உப்பு சேர்த்து பிரட்டி விடவும். 1/4 கப் தண்ணீர் சேர்க்கவும்.
5. கடாயை தட்டு போட்டு மூடி சிம்மில் வைக்கவும்.
6.நன்கு வெந்து எண்ணெய் பிரிந்து வரும்போது மல்லிதழை தூவி இறக்கவும்.
சுவையான கலியா தயார்.
இது நெய் சோறு, மட்டன் குழம்புக்கு நல்ல காம்பினேஷன்.
திருமண விருந்துகளில் நெய் சோறுடன் இதனை பரிமாறுவார்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...