சன்னா தால் புலாவ்
தேவையான பொருட்கள் :
பிரியாணி அரிசி - 1 கப்
சன்னா தால் / கடலை பருப்பு- 1/4 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
கேரட் - 1/2
புதினா - சிறிதளவு
இஞ்சிபூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
சீரக தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - 3/4 ஸ்பூன்
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
பட்டை - 1 துண்டு
கிராம்பு, ஏலக்காய் - 2
செய்முறை :
1. வெங்காயம், கேரட், தக்காளியை மெல்லியதாக நறுக்கி கொள்ளவும். மிளகாயை நடுவில் கீறி வைக்கவும்.
2. அரிசி, பருப்பை கழுவி விட்டு 20 நிமிடம் ஊற வைக்கவும்.
3. குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
4. வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு விழுது, உப்பு சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
5. பின்னர் தக்காளி, கேரட் சேர்த்து வதக்கவும்.
6. தூள் வகைகள், தயிர் சேர்த்து பிரட்டி விடவும்.
7. அத்துடன் 2 கப் தண்ணீர் புதினா சேர்த்து கொதி வந்ததும் அரிசி, பருப்பை சேர்த்து மூடி போட்டு 2 விசில் வைத்து இறக்கவும்.
சுலபமாக செய்யகூடிய சன்னா தால் புலாவ் தயார்.
விருப்பமான தொடுகறிகளுடன் சுவைக்கலாம்.
லன்ச் பாக்ஸிற்கு ஏற்ற உணவாக இருக்கும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...