க்ரிஸ்பி தால் பக்கோடா
தேவையான பொருட்கள் :
உளுத்தம் பருப்பு - 1/2 கப்
கடலை பருப்பு - 1/2 கப்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறு துண்டு
வெங்காயம் - 1
கேரட் - 1/2
கறிவேப்பிலை - 1 கொத்து
புதினா - சிறிது
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
கரமசாலா தூள்- 1/4 ஸ்பூன்
உப்பு - 3/4 ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை :
1. பருப்பு வகைகளை தண்ணீரில் நன்கு களைந்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
2. வெங்காயம், கேரட்டை மெல்லியதாக நறுக்கி கொள்ளவும். கறிவேப்பிலை, புதினாவை பொடியாக நறுக்கி வைக்கவும்.
3. பருப்பை வடிகட்டி மிக்சியில் பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
4. ஒரு பவுலில் அரைத்த பருப்புடன் தூள் வகைகள், உப்பு சேர்த்து பிசிறி கொள்ளவும்.
5. பின்னர் அதனுடன் வெங்காயம், கேரட், புதினா, கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
6. கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் மாவை சிறிது சிறிதாக கிள்ளி போட்டு இருபுறமும் வேக விட்டு பொரித்து எடுக்கவும்.
க்ரிஸ்பியான தால் பக்கோடா தயார்.
சாஸுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...