கறிவடகம் துவையல்


கறிவடகம் துவையல்

தேவையான பொருட்கள்: 

தேங்காய் - 1/2 மூடி
வரமிளகாய் - 2 
கறிவடகம் - 2 டேபிள் ஸ்பூன் 
புளி - சிறிது 
உப்பு - 3/4 ஸ்பூன் 
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் 

செய்முறை :

1. பானில் எண்ணெய் விட்டு சூடானதும் வரமிளகாயை லேசாக வறுத்து எடுத்து கொள்ளவும்.

 2. பின்னர் கறிவடகம் கருகாமல் வறுத்து கொள்ளவும்.



 3. துறுவிய தேங்காயை நன்கு சிவக்க வறுத்து ஆற விடவும். 




 4. இதனுடன் புளி, உப்பு சேர்த்து மிக்சியில் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து     கெட்டியாக அரைத்து எடுக்கவும். கறிவடகம் துவையல் தயார்.   







 5. காரம் தேவைப்படுவோர் இன்னும் 2 வரமிளகாய் சேர்த்து கொள்ளலாம். 




 நோன்பு கஞ்சியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்..

 கலந்த சாத வகைகளுடனும் தொடுகறியாக சாப்பிடலாம்.  




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes