பனீர் குடைமிளகாய் மசாலா

 பனீர் குடைமிளகாய் மசாலா

தேவையான பொருட்கள்:

பனீர் - 1 பாக்கெட் 
குடைமிளகாய் - 1
வெங்காயம் - 1
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 1
இஞ்சிபூண்டு விழுது - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
சீரக தூள் - 1/2 ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
புதினா - சிறிது
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை : 

 1. பனீரை சதுர துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். குடைமிளகாயையும் சதுரமாக நறுக்கி வைக்கவும்.




 2. வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கி கொள்ளவும். மிளகாயை நடுவில் கீறி வைக்கவும். தக்காளியை மிக்சியில் விழுதாக அரைத்து கொள்ளவும்.

3. கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் பனீர் துண்டுகளை போட்டு பொரித்து எடுக்கவும். 



4. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு சேர்த்து தாளித்து வெங்காயம், மிளகாய், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.



4. பின்னர் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். 


5. தூள் வகைகள், உப்பு சேர்த்து பிரட்டிவிடவும். அரைத்து வைத்த தக்காளி விழுதை சேர்க்கவும்.




6. அத்துடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கலந்து கொதிக்க வைக்கவும்.




7. மசாலா எண்ணெய் பிரிந்து வந்ததும் வறுத்து வைத்துள்ள பனீர் துண்டுகளை 

சேர்த்து புதினாவை தூவி விடவும்.



சுவையான எளிதில் செய்யகூடிய பனீர் குடைமிளகாய் மசாலா தயார்..



சப்பாத்தி, பரோட்டா உடன் சாப்பிட சுவையாக இருக்கும்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes