இறால் - 1/4 கிலோ
இஞ்சிபூண்டு விழுது - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மிளகு தூள் - 1 ஸ்பூன்
சீரக தூள் - 1 ஸ்பூன்
உப்பு - 3/4 ஸ்பூன்
தேங்காய் பால் - 1/2 கப்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை :
1. இறாலை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.
2. பானில் எண்ணெய் விட்டு சூடானதும் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போனதும் இறால் சேர்த்து வதக்கவும்.
3. பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரக தூள், உப்பு சேர்த்து பிரட்டி விடவும்.
4. மசாலா வாசம் போனதும் தேங்காய்ப்பால் சேர்த்து கலந்து விட்டு மூடி போட்டு வேக விடவும்.
5. இறால் வெந்து வரும்பொழுது மிளகு தூள், கறிவேப்பிலை சேர்த்து பிரட்டி விட்டு எண்ணெய் பிரிந்து வரும்பொழுது அடுப்பை அணைக்கவும்.
சுவையான இறால் மிளகு வறுவல் தயார்.
சாம்பார், ரசம் இவற்றுடன் தொடுகறியாக சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.
















0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...